img
img

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: எடப்பாடி பழனிச்சாமி
புதன் 28 ஜூன் 2017 18:54:44

img

சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்தார். ஆனால் அந்தப் பணிகள் தொடங்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். குழு அமைத்து சிறந்த வரைபடம் தேர்வு செய்யப்பட்டு இந்த நினைவு மண்டபம் கட்டப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img