செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

தந்தை இறந்தது தெரியாமல் உடலில் படுத்து விளையாடிய பிள்ளை!
புதன் 21 ஜூன் 2017 14:07:15

img

தந்தை இறந்ததுகூடத் தெரியாமல் அவரின் உடலில் படுத்துக்கொண்டு விளையாடிய மகனைப் பார்த்து ஊர்மக்கள் கண்கலங்கினர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், கொசூர் கிராமத்திலுள்ள கஸ்பா கடை வீதியில் வசித்து வந்தவர் சின்னகோப்பா (50). கலப்புத் திருமணம் செய்து கொண்ட சின்னகோப்பாவுக்கு இரண்டு வயதில் தவசுமணி என்ற மகன் இருக்கிறான். கலப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர் ஊர்மக்கள். மனைவி இறந்துவிட்டதால்சின்னகோப்பா தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சின்னகோப்பா நேற்று படுத்த படுக்கையிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து ஊர்மக்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, தந்தை இறந்ததுகூட தெரியாமல் அவரது உடலில் படுத்துக்கொண்டு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஊர்மக்கள் கண்கலங்கினர். ஒன்றுமறியாத குழந்தை அநாதையானதை பார்த்து கட்டுப்பாட்டை விலக்கிக்கொண்ட ஊர் மக்கள், சின்னகோப்பா உடலை அடக்கம் செய்தனர். சின்னகோப்பா திடீரென இறந்ததால், குழந்தையை என்னசெய்வதென்று தெரியாத ஊர்மக்கள், கரூரில் உள்ள உதவி மையத்துக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து சிறுவனை அழைத்துச் சென்றனர். அப்போது, 'அப்பா', 'அப்பா' என்று சிறுவன் கூப்பிட்டபடி சென்றது கல் மனதையும் கரையவைக்கும் விதமா இருந்துச்சு' என்று கண்ணீராேடு சாெல்கிறார்கள் ஊர்மக்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img