img
img

கைதி உடையில் ஆஜர்... 50 நிமிடம் விசாரணை..! சசிகலாமீது குற்றச்சாட்டு பதிவு
புதன் 21 ஜூன் 2017 14:01:11

img

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா, பாஸ்கரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1996-97 காலகட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து ஜெயா டிவி-க்குத் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கிய வழக்கில் ஏற்கெனவே சசிகலா, திவாகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது அந்நியச் செலாவணி வழக்கு இருந்து வருகிறது. அமலாக்கத்துறையினர், இவர்கள்மீது ஐந்து வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு, சுமார் 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்னர் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் சசிகலா காணொலிக்காட்சி மூலமாகவும், பாஸ்கரன் நேரிலும் ஆஜராகினர். கைதி உடையில் ஆஜரான சசிகலாவிடம் நீதிபதி ஜாகிர் உசைன் கேள்விகளை எழுப்பினார். அவர் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றச்சாட்டை வாசித்துக்காட்டினார். அந்தக் குற்றச்சாட்டுகளை சசிகலா மறுத்தார். மேலும் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img