சென்னை தாம் முன்வைக்கும் 4 கேள்விகளுக்கு உரிய பதிலை ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டால் அவரது கட்சியில் இணைவேன் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது தமிழர் இயக்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன. அண்மையில் தந்தி டிவி சேனல் நடத்திய விவாதத்தில் சுப. உதயகுமாரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். இத னால் ஆத்திரம் அடைந்த ரஜினி ரசிகர்கள், இருவரையும் தாக்க முயன்றனர். இச்சம்பவத் தொடர்பாக இருவருமே ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் சுப. உதயகுமாரன் இன்று தம்முடைய பக்கத்தில் ரஜினிகாந்த் தொடர்பாக ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் உதயகுமாரன் கூறியுள்ள தாவது: திரு. ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைகிறேன்! ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சரியாக அடையாளப்படுத்துவாரா? நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து, ஐந்து வரிகள் எழுதித் தருவாரா? எங்கள் இடிந்தகரைப் பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடம் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா? கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., மாப்ஸ், ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டிரண்டு வாக்கியங்கள் பேசுவாரா? இவற் றைச் செய்தால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கப்போகும் கட்சியில் இணைந்திட அணியமாய் இருக்கிறேன் நான் என ஒரு பதிவு போட் டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்