img
img

குடியரசுத் தலைவர் காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்டார்!
செவ்வாய் 20 ஜூன் 2017 17:06:03

img

பரபரப்பான பெங்களூரு சாலையில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக குடியரசுத் தலைவரின் காரையே தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலருக் குப் பாராட்டுகள் குவிகின்றன. கடந்த சனிக்கிழமை, பெங்களூருவில் மெட்ரோ க்ரீன் லைன் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பலத்த பாதுகாப்புடன் ட்ரினிட்டி பகுதி வழியாக அழைத்துச் சென்றது பெங்களூரு போலீஸ். அப்போது, ட்ரினிட்டி பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் எம்.எல். நிஜலிங்கப்பா, அந்த வழியை ஆம்புலன்ஸ் ஒன்று கடக்க முடியாமல் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்துள்ளார். உடனே சற்றும் யோசிக்காமல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் காரை தடுத்துநிறுத்தி, முதலில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கவனித்த மற்ற அதிகாரிகளும் பொதுமக்களும் அவரைப் பாராட்டியுள்ளனர். இந்தச் சம்பவம், சமூக வலைதளம் வாயிலாகப் பரவி, ஒரே நாளில் நிஜலிங்கப்பாவை ட்ரெண்டாக்கிவிட்டது. அனைவரின் மனதிலும் நிஜலிங்கப்பா நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img