img
img

என் மகனைக் காப்பாற்றியவர் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஞாயிறு 18 ஜூன் 2017 16:01:15

img

சென்னை, ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘எந்திரன்’ படப்பிடிப்பின் போது இயக்குனர் ஷங்கருக்கு எவ்வளவு பெரிய சாதனையை செதிருக்கார் தெரியுமா உங்களுக்கு. அந்த சாதனையை இயக்குனர் ஷங்கர் கண்ணீர் மல்க கூறியதாவது: ‘நான் சந்தித்தவர்களிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி. என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து அவனுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டு குணப்படுத்த முடியாமல் போறதுனு பல துயரங்களை நான் அடைந்தேன். எல்லாத்தையும் நாங்களும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தோம். வாரம் ஒரு தடவை யாவது டாக்டர்கிட்ட எதுக்காக வாவது அவனை அழைச்சிக்கிட் டுப் போக வேண்டி வரும். ஆறு வயசுலயே எல்லா டாக்டர்களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப் படி. இந்த விஷயத்தைக் கேள்விப் பட்ட ரஹ்மான், ‘ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல் லையோ... பையனை அழைச்சுக் கிட்டு மவுண்ட் ரோட்டில் உள்ள தர்ஹாவுக்கு வரச் சோல்லுங்க’னு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சோல்லியுள்ளார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹாவுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரேயர் பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க. ரஹ்மான் எவ்வளவு பிஸியானவர்? அவர் ஸ்டுடியோவில் எவ்வளவு பேர் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானியா சில மணி நேரங்களை என் மகன் அர்ஜித்துக்காகச் செலவழிச்சு இங்கு வந்தது என்னைக் கண் கலங்க வெச்சிருச்சு. ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடியா ஆகிட்டான். ‘எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!" என்று கூறினார் ஷங்கர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img