img
img

சிகிச்சை, பரோல்... அமைச்சரிடம் பேரறிவாளனின் தாயார் வேண்டுகோள்!
சனி 17 ஜூன் 2017 14:57:17

img

வேலூர் சிறையிலிருக்கும் பேரறிவாளனை மருத்துவ சிகிச்சைக்காக புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள், அமைச்சர் கே.சி.வீரமணியை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளார். 1991 மே 21ஆம் தேதி சென்னையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு விடு தலைப்புலிகள் அமைப்பின்மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுவதால் அவர் சென்னைக்குச் சிகிச்சைக்காக அவ்வப்போது அழைத்து வரப்படுகிறார். இந்நிலையில் பேரறிவாளனை புழல் சிறைக்கு மாற்றுமாறு அவரது தாயார் அற்புதம்மாள், அமைச்சர் கே.சி.வீரமணியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது வேலூர் சிறையிலிருக்கும் பேரறிவாளனுக்குச் சிகிச்சையளிக்க அங்கு வசதி இல்லை என மறுக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார். இதனால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னை புழல் சிறைக்கு மாற்றி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என அமைச்சரிடம் வேண்டுகோள்வைத்துள்ளார் அற்புதம்மாள். மேலும், பேரறிவாளனின் பரோல் மனுவையும் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img