img
img

கோவையில் தலைதூக்கியுள்ள வன்முறைக்கு முடிவுகட்ட வேண்டும்!
சனி 17 ஜூன் 2017 14:47:23

img

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கோவையில் சமீப காலமாகத் தலைதூக்கியுள்ள இத்தகைய வன்முறை நடவடிக் கைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை காந்திபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தின்மீது இன்று (17.6.2017) காலை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கட்சிக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனம் மற்றும் அலுவலகத்தின் ஜன்னல் பகுதி சேதமடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தின் மீதான இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் உழைக்கும் மக்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அணுகும் இடமாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் கோவை மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மக்கள் ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்துக்காகவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளப்பரிய பங்காற்றியுள்ளது. கோவை மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையையும், அமைதியையும் குலைக்க விரும்பும் சக் திகள் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை தரத்தக்க அம்சமாகும். சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தாக்கப்பட்டதும், கொடிக்கம்பங்கள் வெட் டப்பட்ட சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன. காலை நேரத்தில் கட்சி அலுவலகத்தின்மீது நடைபெற்றுள்ள இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, சட்டப் படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும், கோவையில் சமீப காலமாக தலைதூக்கியுள்ள இத்தகைய வன்முறை நடவடிக்கைக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது. தமிழகத்தின் ஜனநாயக இயக்கங்கள் இத்தகைய வன்முறை தாக்குதலுக்கு எதிராக உறுதியாக கண்டனக் குரலெழுப்ப வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img