img
img

சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம்!
வெள்ளி 16 ஜூன் 2017 15:29:14

img

நீதிமன்றத் தடையை மீறி சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டில் கல்லூரி மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாடி வருகின்றனர். சென்னையில் 'பஸ் டே' கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி அவ்வப்போது 'பஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவல்லிக்கேணியில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட் டுள் ளனர். பட்டாபிராம் - அண்ணா சதுக்கம் செல்லும் '27H' மாநகரப் பேருந்தில், மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதி சாலை யிலிருந்து, மாநிலக் கல்லூரியை நோக்கி இந்தக் கொண்டாட்டம் நடந்து வருகிறது. சுமார் 50 மாணவர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இருசக்கர வாகனத்திலும் பல்வேறு மாணவர்கள், இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் போலீஸார் விரட்டி வருகின்றனர். கல்லூரி வளாகத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'பஸ் டே'கொண்டாட உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால், மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img