img
img

போராட்டம் தற்காலிக வாபஸ்- முதல்வர் பழனிசாமியை சந்தித்தபின் அய்யாக்கண்ணு அறிவிப்பு!
சனி 10 ஜூன் 2017 15:13:53

img

விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். டெல்லி ஜந்தர் மந்தரைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தைத் தொடங்கினர் தமிழக விவசாயிகள். வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாள் போராட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் பழனிசாமி, விவசாயிகளை சந் தித்து பேசி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தார். ஆனால் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் சென்னையில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர் விவசாயிகள். இந்நிலையில் இன்று முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாக்கண்ணு, ’கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.மேலும் இரண்டு மாதத்துக்குள் முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என் றால் போராட்டம் தொடரும்’ என்று கூறினார். போராட்டத்தை அவர்கள் தற்காலிக வாபஸ் பெற்றுள்ளனர்!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img