img
img

ஜெயலலிதா விட்டுச் சென்ற ஒரே சோத்து ரூ. 5 லட்சம் கோடி கடன்தான்
செவ்வாய் 06 ஜூன் 2017 20:45:35

img

திருவாடானை முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த மாநிலத்திற்கு விட்டுச் சென்ற ஒரே சோத்து ரூ. 5 லட்சம் கோடி கடன்தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானையில் நடந்த கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அதி முகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஜெயலலிதா தமிழகத்திற்கு வெறும் கடனைத்தான் விட்டுச் சென்றுள்ளார் என்று அவர் சாடினார். தமிழனை ஆட்சி செய்ய வையுங்கள் ஒட்டு மொத்த தமிழர்களும் சேர்ந்து ஒரு தமிழனை ஆட்சி செய்ய வைக்கமுடியும். யார் வேண்டுமானாலும் இந்த நிலத்தில் வாழலாம். ஆனால் இந்த நிலத்தை தமிழன் தான் ஆள முடியும். அரசியல் படியுங்கள் தமிழகத்தில் தனிமனித அபிமானிகளை ஒழிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் அரசியல் படிக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாக கத்தினேன். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு தான் தமிழக மக்கள் ஓட்டுப் போட்டீர்கள். அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் வேண்டாம் என நீங்கள் விலகி நின்றால் நாம் யாரை வெறுக்கிறோமோ அவர் தலைமையிலான ஆட்சியின்கீழ் தான் வாழவேண்டி வரும். வளமெல்லாம் அழிகிறது. நம் வளங்களை அழித்து வருவதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. அரசு போக்குவரத்து துறையில் ரூ.44,000 கோடி கடன். மின் துறையில் பல ஆயிரம் கோடி நஷ் டம். மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழகத் தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார். மிகப்பெரிய கனவுகளோடு நாம் தமிழர் கட்சி தமிழக மக்களுக்காக போராடி வருகிறது. நாம் தமிழரின் கனவு நாம் தமிழர் கட்சியின் தத்துவங்களை வைத்து ஒருநாள் ஆட்சியை நடத் துவார்கள். தமிழனும் தமிழும் 50,000 ஆண்டுகளுக்கு மூத்தவர் கள் என உலக அறிஞர்களும், நம் முன்னோர்களும் சோல்லி சென் றுள்ளனர். தமிழ்நாட்டை சாதி யால் ஆளமுடியாது என்றார் சீமான்

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img