img
img

விமானத்தில் செல்ல கத்தியுடன் வந்த பெண் எம்.பி.
சனி 03 ஜூன் 2017 15:34:49

img

புதுடில்லி உ.பி., மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., பெண் எம்.பி., விமானத்தில் செல்ல கத்தியுடன் வந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உ.பி., மாநிலம், பாராபங்கி லோக்சபா தொகுதியின் பா.ஜ., எம்.பி., பிரயங்கா சிங் ரவாத். இவர், நேற்று டில்லியில் இருந்து லக்னோ செல்வதற்காக, டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திற்கு வந்தார். அவரது கைப்பையை, எக்ஸ்ரே கருவி மூலம் சோதனை செய்த, மத்திய தொழிலக பாதுகாப்பு படை எனப்படும் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள், அதில் கத்தி ஒன்றை கண்டுபிடித்தனர். அதை எடுத்து கொண்டு விமானத்தில் செல்ல கூடாது என்பதற்கான விதிமுறைகளை எம்.பி.,க்கு எடுத்து உரைத்தனர். அதை பெண் எம்.பி., ஏற்க மறுத்தார். அது கத்தியே அல்ல. சாவி வளையம் என சாதித்தார். ஒரு கட்டத்தில், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் மீது புகார் கொடுப்பேன் என வும் எச்சரிக்கை விடுத்தார். ஏர் இந்தியா அதிகாரிகள் சமாதானம் இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அந்த கத்தியை விமானத்தில் பாதுகாப்பான பகுதியில் வைப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகே சமாதானமடைந்த பெண் எம்.பி., விமானத்தில் ஏறினார். விமானம் தாமதமானதால் பதட்டத்தில் இருந்த பிற பயணிகள் ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img