img
img

ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்து! உயிர் தப்பிய முதல்வர்!
வியாழன் 25 மே 2017 13:14:56

img

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பயணம்செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், முதல்வர் பட்நாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில், முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் இன்று மதியம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பயணத்தில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸுடன் ஐந்துபேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய அனைவரும் காயங்களின்றி உயி பிழைத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை உடனடியாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்த்தார், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ். தன் ட்விட்டர் பதிவில், ‘நாங்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது. நானும் என்னுடன் பயணித்தவர்களும் பாதுகாப்பாக உள்ளோம். வருந்தப்பட வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். விபத்து நடந்த உடனேயே பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img