img
img

ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் மண்டை உடைப்பு!
திங்கள் 22 மே 2017 18:05:08

img

ஓ.பி.எஸ்- சசிகலா அணியினரிடையே நடைபெற்ற மோதலால் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். வடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர்த் தொகுதியைச் சேர்ந்தவர் எஸ்.அறிவழகன். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருக்கிறார். தண் டையார்பேட்டை கோதண்டராமர் தெரு வழியாக நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் அறிவழகன் வந்தபோது, அவரை பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சூழ்ந்து, ஆயுதங்களால் தாக்கினர். இந்தத் தாக்குதலில் அறிவழகன் மண்டை உடைந்து அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அறிவழகனை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீஸில் அறிவழகன் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணியின் வெற்றிக்காக நான் தீவிரமாக தேர்தல் பணியாற்றினேன். என் மீதும், எங்கள் அணி மீதும் கோபத்தில் இருக்கும் சசிகலா ஆதரவாளரான வட்டச் செய லாளர் லோகு, இதனால் என்னை எதிரியாக கருதினார். என்னைப் பழிவாங்க தீவிர முயற்சி செய்தார். நேற்றும் அதே எண்ணத்துடன் வீட்டுக்கு வரும் வழி யில் கூலிப்படையை வைத்து என்னைத் தாக்கினார். இது திட்டமிட்ட சதி. சம்பவம் குறித்து போலீஸார், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img