img
img

நீட் தேர்வு விவகாரம்: தமிழகத்தை கைவிட்ட மத்திய அரசு!
செவ்வாய் 16 மே 2017 14:35:01

img

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாதென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தற்போது அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்பு களுக்கு என நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது. இதற்காகவே தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் தற்போது அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டத்தாவது: ‘பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது. உச்சநீதிமன்றத்தின் விதிமுறையின் படியே இத்தேர்வு நடத்தப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக செயல்படவோ, மாற்றுக் கருத்து தெரிவிக்கவோ போவதில்லை. நீட் தேர்வினைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து முன்னரே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது’ எனக் கூறி யுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img