img
img

முதல்வர் பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பின் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!
புதன் 10 மே 2017 15:22:07

img

நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவதுகுறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை செய்தபின் முடிவு எடுக்கப் படும்' என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அய்யாக்கண்ணு இன்று நேரில் சந்தித்துப் பேசினார். விவசாயி களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வருடன் சந்திப்பு நடைபெற்றது. இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 'விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்தார். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டத்துக்கு மே 18-ம் தேதி டெல்லி செல்கிறேன். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மே 21-ம் தேதி நாடாளுமன்றம் முற்றுகை அல்லது பிரதமர் அலு வலகத்தை முற்றுகையிடுவது குறித்து ஆலோசனை செய்யப்படும். இந்தியா ஜனநாயக நாடு இல்லை. சர்வாதிகார நாடு. நான் போராட்டத்தைத் தொடங் கினால், ஹெச்.ராஜாவும் தமிழிசையும் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறேன் என்று கூறுவார்கள்' என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img