img
img

ஜாமீன் கேட்கிறார் தினகரன்; காவலில் எடுத்தது டெல்லி போலீஸ்
புதன் 26 ஏப்ரல் 2017 18:56:53

img

டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக டி.டி.வி. தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினகரனிடம் டெல்லி காவல்துறையினர் நான்கு நாள்களாக விசாரணை செய்தனர். நான்கு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார் என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி டெல்லி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்திரி, டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரு வாரம் வரை போலீஸ் காவலில் விசாரணை தொடரும் என்று தெரிகிறது. சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img