img
img

சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம்
புதன் 19 ஏப்ரல் 2017 08:09:17

img

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தனர். குறிப்பாக, இன்றும் தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், "தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. தினகரன் குடும்பத்துக்கு இனி கட்சியில் இடம் கிடையாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார். தினகரன் குடும்பத்தின் தலையீடு, கட்சியிலும் ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது. ஒற்றுமையாகக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும். ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்டு, சிறப்பான ஆட்சியைத் தொடர்வோம். முதலமைச்சர் உள்பட, அனைத்து அமைச்சர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பர். சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்."தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளது . பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார்" என்று அமைச்சர் சி.வி சண்முகம் கூறினார். "அனைவரின் ஒட்டுமொத்த முடிவைதான் ஜெயக்குமார் கூறினார். அனைவரும் சேர்ந்து இரட்டை இலையை பெறுவோம்" என்று நடராஜன் கூறி னார்.'ஜெயலலிதா விருப்பத்தின்படி ஆட்சியை கொண்டு செல்வோம்' என்று வைத்திலிங்கம் கூறினார். 'கட்சியில் பிரிவு இருக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்" என்று அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img