img
img

உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் இயக்குநர் கவுதமன்!
ஞாயிறு 16 ஏப்ரல் 2017 14:23:20

img

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குநர் கவுதமன், உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற் றுள்ளார். டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் கடந்த 13ம் தேதி காலை, சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சாலையில் பூட்டு போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் உள்ளிட்ட 7 பேரை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர். அனைவரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் அன்று இரவே புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கவுதமன் மற்றும அவர் உடன் இருந்த ஆறு மாணவர்களும் சிறையில் இருந்தபடியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். சிறையில் அளிக்கும் உணவை சாப்பிட மறுத்தனர். உண்ணாவிரதத்தை கைவி டும்படி சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் கவுதமன் உள்ளிட்ட ஏழு பேரும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக இன்று காலை அறிவித்துள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img