img
img

கணவரை வீட்டை விட்டு வெளியேற்றிய தீபா!
சனி 15 ஏப்ரல் 2017 11:24:44

img

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா, தன் கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனர் சரண்யா என்பவரும், செயலாளராக தீபாவின் கார் ஓட்டுநர் ஏ.வி.ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்குப் பதவி அளித்ததற்கு, தீபாவின் கணவர் மாதவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்ததாராம். 'தான் கூறும் நபர்களுக்கே கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் ' என்று தீபாவுக்கு மாதவன் நெருக்கடி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தீபா, மாதவனை ஓரம்கட்டினார். ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட தீபா, தனது வேட்பு மனுவில் கணவர் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. பின்னர், மாதவன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தீயவர்கள் தீபாவுக்ந்த் துணையாக இருக்கிறார்கள் என்பது மாதவன் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையில், தியாகராயர் நகரில் உள்ள தீபா வீட்டுக்கு நேற்று தனது ஆதரவாளர்களுடன் வந்த மாதவன், தீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். 'எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்' என பதில் கூறிய தீபா, மாதவனை வீட்டை விட்டு வெளியேற்றி , அவரை மீண்டும் வீட்டுக்குள் விடவேண்டாம் என காவலாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், தீபா ஆதரவாளர்களுக்கும் மாதவன் ஆதரவாளர்ளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் கையில் கிடைத்ததைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். சம்பவம் பற்றி கேள்விபட்ட போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img