img
img

வடிவேலு, சிங்கமுத்துவுக்கு கைது ஆணை
சனி 08 ஏப்ரல் 2017 18:35:21

img

நில மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புறநகரில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சில சோத்துக்களை வாங்கினார். இந்த சோத்துக்களை மற்றொரு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, வடி வேலுவுக்கு வாங்கிக் கொடுத்தார். இந்த சோத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் வடிவேலுவுக்கு விற்பனை செயப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட கங்கா உள்பட 5 பேர் தங்கள் மீதான வழக்கை ரத்து செயக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகியோர் இடையே இருந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டதாகவும், எனவே இந்த மோசடி வழக்கை ரத்து செயவேண்டும் என்றும் இருதரப்பு வக்கீல்கள் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, வடிவேலு வையும், சிங்கமுத்துவையும் ஏப்ரல் 7ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.வி. முரளி தரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்வதாக இருதரப்பினரும் கூறிய தால், அதனால் அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டேன். ஆனால், அவர்கள் இருவரும் வரவில்லை. அதற்கு அற்பத்தனமாக காரணங்களை இருதரப் பினர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கூறுகின்றனர். அவர்கள் நேரில் ஆஜராகாதது, கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே, இந்த வழக்கை வரும் 20ஆம் தேதி தள்ளிவைக்கிறேன். அன்று பிற்பகல் 2.15 மணிக்கு வடிவேலும், சிங்கமுத்துவும் நேரில் ஆஜராக வேண்டும். அப்படி ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கவும் இந்த நீதிமன்றம் தயங்காது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img