img
img

விவசாயிகள் தற்கொலை தேசத்துக்கு தலைகுனிவு
திங்கள் 03 ஏப்ரல் 2017 16:32:12

img

உயிர்களையும் காக்கும் விவசாயிகள் உயிர்வாழ முடியாமல் தற்கொலை செத கொள்வது இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டு விவசாயம் பொத்துப் போனது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருவதால் 200க் கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை கொண்டுள்ளனர். பயிர் செய வாங்கிய கடைனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகளை வங்கி அதி காரிகள் மிரட்டுவதால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செத கொண்டனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டில்லியில் கடந்த 21 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களை ஆளும் பாஜக அரசு கண்டகொள்ளாமல் இருப்பது விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனை குறித்து செதியாளர்களிடம் பேசிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், பயிர்கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செது கொள்வது இந்த நாட்டுக்கே மிகப் பெரிய தலைகுனிவு என தெரிவித்தார். இந்த நாட்டுக்கே உணவளித்துவரும் அவர்களை நாம் அனைவரும் ஒன்றினைந்து பாதுகாக்க வேண்டும் என சகாயம் தெரிவித்தார். இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகள் பக்கம் இருக்க வேண்டம் என வலியுறுத்திய சகாயம், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என தெரிவித்தார். அறவழியில், சட்டத்திற்குட்பட்டு விவசாயிகளுக்காக இளைஞர்கள் போராடிவருவதில் எந்த தவறும் இல்லை என சகாயம் தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img