img
img

விரைவு ரெயில் தடம்புரண்டதில் 52 பேர் காயம்
வியாழன் 30 மார்ச் 2017 15:35:37

img

உத்தர பிரதேச மாநிலம் மகோபா ரெயில் நிலையம் அருகே சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், அந்த ரெயிலின் 8 பெட்டிகள் தண்ட வாளத்தை உடைத்துக்கொண்டு தரையில் புதைந்தது. சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு தண்டவாளம் சேதம் அடைந்தது. இந்த விபத்துபற்றி தகவல் அறிந்த ரெயில்வே மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 52 பயணிகள் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து திட்டமிட்ட நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், முதற்கட்ட விசாரணையில் அப்படி எதுவும் சந்தேகப்படும்படியான தகவல் கிடைக்கவில்லை என காவல்துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என கூறினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த் நாத் சிங், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டார். பின் னர் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். ரெயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ரெயில் தடம்புரண்டது தொடர்பாக ரெயில்வேயின் மூத்த அதிகாரியால் விசாரணை நடத்தப்படும்’ என்றார். இது நாசவேலையா அல்லது பராமரிப்பு குறைபாடு காரணமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, எதையும் உறுதியாக கூற முடியாது என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img