சர்வதேச நாடுகளை பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் மூன்றாம் உலகப்போர் எதிர்வரும் மே 13-ம் திகதி தொடங்கும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறுவதில் பிரபலமானவர் நாஸ்டர்டாமஸ். 2017-ம் ஆண்டு தொடங்கி மூன்றாம் உலகப்போர் உலகை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் எனக் கணித்தார். இவரை தொடர்ந்து பாபா வாங்கா என்ற மூதாட்டி மூன்றாம் உலகப்போர் 2016 முதலே தொடங்கி விடும் என கணித்துக் கூறினார். தற்போது இருவரை தொடர்ந்து Clairvoyant Horacio Villegas என்பவர் இவ்விரு கருத்துக்களையும் உண்மை எனக் கூறியுள்ளார். 2016-ம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்பார் என இவர் 2015-ம் ஆண்டிலேயே சரியாக கணித்து கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது 2017-ம் ஆண்டு மே மாதம் 13-ம் திகதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்ற பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சிரியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளும் இந்த மூன்றாம் உலகப்போரில் பங்கேற்கும். இந்த மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு டொனால்ட் டிரம்ப் தான் காரணமாக இருப்பார்.மே 13 முதல் அக்டோபர் 13-ம் திகதிக்குள் மூன்றாம் உலகப்போரின் பேரழிவை உலகம் சந்திக்கும். இந்த யுத்தத்தில் சிரியா அதிபரான ஆசாத் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்படுவார். மேலும், மூன்றாம் உலகப்போருக்கு பின்னர் ‘பேரழிவின் மன்னர்’ என டொனால்ட் டிரம்ப் அழைக்கப்படுவார் என Clairvoyant Horacio Villegas கணித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்